TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கடல் பசு காப்பகம்

September 25 , 2022 666 days 653 0
  • இந்தியாவின் முதலாவது ‘கடல்பசு காப்பகமானது’ தமிழகத்தில் அறிவிக்கப் பட்டு உள்ளது.
  • இந்த உயிரினமானது கடல் விலங்கினங்களைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உதவும் என்பதால், இந்த அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
  • பாக் விரிகுடாவில் இந்தக் காப்பகம் நிறுவப்பட உள்ளது.
  • கடல் பசுவானது முதன்மையாக கடல்பகுதியில் வளர்கின்ற புல் படுக்கைகளை நம்பி வாழ்கின்ற மிகப்பெரிய தாவர உண்ணி  வகையிலான கடல் வாழ் பாலூட்டிகளாகும்.
  • இந்தியாவில் சுமார் 240 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
  • அவற்றில் பெரும்பாலானவை பாக் விரிகுடா பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்