இந்தியாவின் முதல் செவித்திறன் குறைபாடுள்ள வழக்கறிஞர்
October 17 , 2023 259 days 182 0
சாரா சன்னி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நியமிக்கப் பட்டதை அடுத்து இந்தியாவின் முதல் செவித்திறன் குறைபாடுள்ள வழக்கறிஞர் என்ற ஒரு வரலாற்றினைப் படைத்துள்ளார்.
நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக செல்வி சன்னி அவர்களுக்காக என்று அவரது உரைப் பெயர்ப்பாளரை நீதிமன்றம் நியமித்துள்ளது.
முன்னதாக, செவித்திறன் குறைபாடுள்ள வழக்கறிஞர் சௌதாமினி பெத்தே என்பவருக்கு ஒரு வழக்கில் வாதாடுவதற்காக டெல்லி உயர்நீதிமன்றமானது அனுமதி அளித்து முன்னோடியாக உள்ளது.