TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மாநகராட்சிப் பத்திரக் குறியீடு

March 2 , 2023 505 days 295 0
  • NSE குறியீடுகள் நிறுவனமானது, இந்தியாவின் முதல் மாநகராட்சிப் பத்திரக் குறியீட்டினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • நிஃப்டி இந்தியா மாநகராட்சிப் பத்திரக் குறியீடானது, இந்திய மாநகராட்சிக் கழகங்களால் வழங்கப்பட்ட மாநகராட்சிப் பத்திரங்களின் செயல்திறனை அவற்றின் நிறைவுக் காலம் மற்றும் முதலீட்டுத் தரக் கடன் மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் கண்காணிக்கிறது.
  • இந்தியப் பத்திரப் பரிவர்த்தனை வாரியத்தின் பத்திர வெளியீடு மற்றும் 2015 ஆம் ஆண்டு மாநகராட்சிக் கடன் பத்திரங்கள் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் படி வழங்கப் பட்ட மாநகராட்சிக் கடன் பத்திரங்கள் இந்தக் குறியீட்டில் அடங்கும்.
  • தற்போது, AA தர வரிசைப் பிரிவில் தர மதிப்பீடு பெற்ற 10 பத்திர  வழங்கீட்டு நிறுவனங்களால் வழங்கப்பட்ட 28 மாநகராட்சிக் கடன் பத்திரங்கள் இந்தக் குறியீட்டில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்