மத்திய அரசானது தமிழ்நாட்டில் மேகமலை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவற்றின் வனப் பகுதிகளில் பரவியிருக்கும் சரணாலயங்களுக்கு புலிகள் காப்பக அந்தஸ்து என்ற தகுதி நிலையினை வழங்கியுள்ளது.
இது 63 பாலூட்டி இனங்கள் மற்றும் 323 பறவை இனங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றது.
இது இந்தியாவின் 51வது புலிகள் காப்பகம் மற்றும் தமிழ்நாட்டிற்கான 5வது புலிகள் காப்பகம் ஆகும்.
மேகமலை வனவிலங்குச் சரணாலயமானது தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் (மேகமலைக் குன்றுகள் மற்றும் ஏலக்காய் மலைகள்) பரவிக் காணப்படுகின்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நரை மயிர் அணில் வனவிலங்குச்சரணாலயமானது கேரளாவில் பெரியார் புலிகள் காப்பகத்தின் பகுதியோடுச் சேர்ந்து அமைந்துள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட கடைசியான ஒரு புலிகள் காப்பகம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள காம்லாங் என்பதாகும்.