2021-2022 ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டினை விஞ்சி இந்தியா உலகின் முன்னணிச் சர்க்கரை உற்பத்தியாளராக மாறியுள்ளது.
எனினும் சர்க்கரை உற்பத்தியில் ஆற்றல் வளங்கள் அதிகளவில் பயன்படுத்தப் படச் செய்வதால் ஆற்றல் வளங்கள் வேகமாக குறைந்து வருவது என்பது எதிர்காலத்தில் ஆற்றல் வளங்களின் பயன்பாட்டில் நெருக்கடி நிலை ஏற்பட வழி வகுக்கும்.
உபரி சர்க்கரை உற்பத்தி மற்றும் அதிகளவில் மேற்கொள்ளப்படும் சர்க்கரை ஏற்றுமதி என்பது, நியாயமான மற்றும் இலாபகரமான விலை (FRP) திட்டம் மற்றும் மாநில அரசின் மானியங்கள் போன்ற கரும்புச் சாகுபடிக்குச் சாதகமான அரசுக் கொள்கைகளின் விளைவாக பதிவாகியுள்ளது.
இந்தியாவிலுள்ள கரும்பு விளைச்சலில் முன்னணியில் உள்ள பல மாநிலங்கள் நீர்ப் பாசனத்திற்காக நிலத்தடி நீரையே பெரிதும் சார்ந்துள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் குறைதல் போன்றப் பிரச்சினைக்கு இது வழி வகுக்கிறது.