நிதி ஆயோக் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையானது இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே காரீய நச்சுத்தன்மையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையினை எடுத்துக் காட்டுகிறது.
காரீய நச்சுத்தன்மையினால் ஏற்படும் அதிக சுகாதாரம் மற்றும் பொருளாதாரச் சுமை இந்தியாவில் பதிவாகியுள்ளது.
2020 ஆம் ஆண்டின் அறிக்கையானது, உலகம் முழுவதும் காரீய நச்சுத்தன்மையினால் பாதிக்கப்பட்ட மொத்த 800 மில்லியன் குழந்தைகளில் 275,561,163 பேர் இந்தியாவில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
அதாவது இந்தியாவில் 50 சதவீத குழந்தைகள் காரீய நச்சுத்தன்மையினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இது நாட்டில் 2.3 லட்சம் அளவிலான முன்கூட்டிய மரணங்களுக்கும் வழி வகுத்தது.
பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை இந்திய மாநிலங்களில் சராசரியாக இரத்தத்தில் அதிக காரீயக் கலப்பு அளவை (BLL) கொண்டிருப்பதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
இது அதிக சராசரி இரத்தத்தில் அதிக காரீயக் கலப்பு அளவைக் கொண்ட மொத்த இந்திய மக்கள்தொகையில் 40% ஆகும்.