கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் மின்னணுக் கழிவுகளின் (மின்-கழிவு) உற்பத்தி அதிகரித்துள்ளதோடு 2019-20 ஆம் ஆண்டில் 1.01 மில்லியன் மெட்ரிக் டன்னாக (MT) இருந்த இது 2023-24 ஆம் ஆண்டில் 1.751 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
தேசிய அளவிலான புள்ளி விவரங்கள், 2019-20 ஆம் ஆண்டில் இருந்து மின்னணுக் கழிவு உற்பத்தி 72.54 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறுகின்றன.
2019-20 ஆம் ஆண்டில் 22 சதவீதமாக இருந்த மின்னணுக் கழிவுகளின் விகிதம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 43 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்த அதிகரிப்பு பதிவான போதிலும், 990,000 மெட்ரிக் டன்களுக்குச் சமமான சுமார் 57 சதவீத மின்னணுக் கழிவுகள் நாட்டில் செயல்முறைக்கு உட்படுத்தாமல் உள்ளன.