மேகாலயா மாநில அரசானது ரூ.209 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய “பன்றித் தொழுவத் திட்டத்தை” தொடங்கியுள்ளது.
இது மேகாலயா கால்நடைத் தொழிற்துறைகள் மேம்பாட்டுச் சமூகத்தின் கீழ் தொடங்கப் பட்டுள்ளது. இது தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் நிதியளிக்கப் படுகின்றது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அடுத்த 3 ஆண்டுகளில் பன்றி இறைச்சி உற்பத்தியில் தற்சார்பு உடையதாகவும் பன்றி இறைச்சியின் வருடாந்திர இறக்குமதியைக் குறைப்பதாகவும் உள்ளது.