TNPSC Thervupettagam

இந்தியாவுடன் ராணுவ உறவை பலப்படுத்த புதிய மசோதா - அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

July 17 , 2017 2541 days 1055 0
  • அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ. 40.3 லட்சம் கோடி ஒதுக்குவது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது.
  • இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது தொடர்பான திருத்த மசோதாவும் நிறைவேறியது.
  • அமெரிக்காவில் வரும் அக்டோபர் 1-ம் தேதி அடுத்த நிதியாண்டு (2018) தொடங்குகிறது.
  • இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இதன் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு ஒப்புதல் சட்ட மசோதா 2018 தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்புத் துறைக்கு ரூ.40.3 லட்சம் கோடி ஒதுக்க வகை செய்யும் இந்த மசோதா நிறைவேறியது.
  • இந்த மசோதாவின் ஒரு பகுதியாக இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய வம்சாவளியைச் சார்ந்த அமெரிக்க எம்.பி. அமி பேரா ஒரு திருத்த மசோதா கொண்டு வந்தார். இது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
  • இந்தியா, அமெரிக்கா இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை பலப்படுத்துவது தொடர்பான வியூகங்களை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் வகுக்க இந்த மசோதா வகை செய்கிறது. இதற்காக 180 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
  • அடுத்தபடியாக இந்த மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் (மேலவை) நிறைவேற வேண்டும். அதன் பிறகு அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்