இந்தியாவை உருமாற்றுகின்ற பெண் விருதுகளின் மூன்றாவது பதிப்பானது இந்திய அரசாங்கத்தின் சிந்தனையாளர் நிறுவனமான நிதி ஆயோக்கினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்த விருதின் கருத்துருவானது, “பெண்கள் மற்றும் தொழில்முனைவு” என்பதாகும். மேலும் 15 வெற்றியாளர்கள் இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருதானது மற்றவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய பெண்கள் மற்றும் கடின உழைப்பை மேற்கொள்ளக்கூடிய பெண்கள் ஆகியோர்களைக் கௌரவிப்பதற்காக 2016 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.