நிதி ஆயோக் அமைப்பின் மகளிர் தொழில் முனைவுத் தளமானது 2022 ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று ‘5வது இந்தியாவை மாற்றியமைக்கும் பெண்மணிகள் விருது’ என்ற ஒரு விருது வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்தது.
இந்த விருதுகளானது “சாசக்த் ஔர் சமர்த் பாரத்” என்பதற்கான ஒரு பங்களிப்பினை ஆற்றிய 75 பெண் சாதனையாளர்களுக்குக் கௌரவம் அளிக்கும் விதமாக வழங்கப் பட்டது.
இது இந்தியாவின் பெண் தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உண்டாக்குபவர்களின் பாராட்டத் தக்க மற்றும் அற்புதமான முயற்சிகளை முன்னிலைப்படுத்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.