தெற்கு சூடானில் பணியாற்றும் சுமார் 850ற்கும் மேற்பட்ட இந்திய அமைதிப் படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக ஐக்கிய நாடுகளின் மதிப்பு மிக்க விருது அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக அதிக அளவிலான வீரர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
தற்போது, தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதித் திட்டத்தில் 2,342 இந்தியத் துருப்புக்கள் மற்றும் 25 காவல் துறைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.