இந்திய இராணுவத்தின் 75வது காலாட்படை தினம் – 27 அக்டோபர்
October 28 , 2021 1035 days 450 0
இந்த ஆண்டு நமது தேசம் தனது 75வது காலாட்படை தினத்தைக் கொண்டாடுகிறது.
காலாட்படை தினமானது சுதந்திர இந்தியாவின் முதல் இராணுவ நிகழ்ச்சியின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு அக்டோபர் 27 அன்று இந்திய நாட்டில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் லஷ்கர் படையினர் நடத்திய முதல் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்தின் சீக்கியப் படைப் பிரிவின் முதல் படைப்பிரிவு போரிட்டு வெற்றி பெற்றது.
இந்தப் போர் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்றது.
காலாட்படையானது இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய போர்ப் படையாகும்.
இந்தப் படையானது “போர்களின் ராணி” எனஅழைக்கப்படுகிறது.