TNPSC Thervupettagam

இந்திய எல்லைக்கு அருகில் அணை நிறுவும் சீனா

February 7 , 2023 531 days 249 0
  • இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளின் முச்சந்திப்புப் பகுதிக்கு அருகில், திபெத்தில் உள்ள மப்ஜா சாங்போ ஆற்றின் மீது சீனா ஒரு புதிய அணையை கட்டி வருகிறது.
  • இந்தப் புதிய அணையானது, முச்சந்திப்பு பகுதியில் இருந்து வடக்கே 16 கி.மீ தொலைவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் காலாபாணி பகுதிக்கு எதிரே அமைந்து உள்ளது.
  • மப்ஜா சாங்போ நதியானது திபெத்தின் நகரி மாவட்டத்தில் தோன்றுகிறது.
  • இது நேபாளம் வழியாக காகரா நதியுடன் இணைந்து, இந்தியாவில் கங்கை நதியில் கலக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்