மேற்குத் தொடர்ச்சி மலையில் புதிய வகை தேனீ இனம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
இந்தப் புதிய இனத்திற்கு ஏபிஸ் கரிஞ்சோடியன் என்று பெயரிடப்பட்டு, இந்திய கருப்பு நிறத் தேனீ என்ற பொதுப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.
200 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஒரு புதிய வகை தேனீ இனம் கண்டறியப்பட்டுள்ளது.
1798 ஆம் ஆண்டில் ஃபேப்ரிசியஸ் என்பவரால் இந்தியாவில் பகுதியில் கண்டறியப் பட்டதாக குறிப்பிடப்பட்ட கடைசி தேனீ அபிஸ் இண்டிகா ஆகும்.
ஃபேப்ரிசியஸ் இந்தியத் தேனீக்கு அபிஸ் இண்டிகா என்று பெயரிட்டாலும், அது இது வரை இந்தியாவினைச் சேர்ந்த இனமாக கருதப்படவில்லை.
'ரேடியோ-இடைநிலை குறியீடு (RMI)’ எனப்படும் தேனீ வகைகளில் நிலவும் இனப் பாகுபாட்டிற்கான ஒரு புதிய நடவடிக்கையின் அடிப்படையில் ஆய்வுக் குழு அபிஸ் இண்டிகாவின் நிலையை விவரித்து மீண்டும் குறிப்பிட்டது.
இன்று வரை, மத்திய மற்றும் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் சமவெளிகளில் அபிஸ் செரானா என்ற ஒரு இனம் மட்டுமே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பானது உலகில் உள்ள தேனீக்களின் இனத்தை 11 ஆக உயர்த்தியுள்ளது.