TNPSC Thervupettagam

இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை உருவாக்க தினம் - அக்டோபர் 24

October 26 , 2023 301 days 138 0
  • 62வது இந்திய-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) படை எழுச்சி தினம் ஆனது இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நாள் ஆனது இந்த காவலர்களின் வீரம் மற்றும் தியாகத்தை நினைவு கூரும் விதமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய-திபெத்திய எல்லையில் எல்லை உளவுத்துறை மற்றும் பாதுகாப்பினை மறு சீரமைப்பதற்காக 1962 ஆம் ஆண்டில் இந்திய-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) படை உருவாக்கப்பட்டது.
  • லடாக்கின் காரகோரம் கணவாய் முதல் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபுலா கணவாய் வரையிலான இந்திய-சீன எல்லையில் ரோந்துப் பணிகளை மேற் கொள்ளச் செய்வதற்காக தற்போது இந்திய-திபெத்திய எல்லைக் காவல் (ITBP) படையானது பணி அமர்த்தப் பட்டுள்ளது.
  • இப்படையானது 3,488 கி.மீ. நீள இந்திய-சீன எல்லையில் ரோந்துப் பணிகளை மேற் கொண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்