கூகுள் நிறுவனமானது, இந்தியாவில் உள்ளூர் செய்தி வெளியீட்டு நிறுவனங்களை ஆதரிப்பதற்காக வேண்டி தனது செய்தி முன்னெடுப்பின் கீழ் 'இந்திய மொழிகள் திட்டத்தினை' அறிமுகப் படுத்தியுள்ளது.
இது பல்வேறு கூறுகளின் மூலம் செய்தி வெளியீட்டு நிறுவனங்களை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான முன்னெடுப்பாகும்.
அவர்களின் எண்ணிமச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும், அவர்கள் அதிகமான வாசகர்களைச் சென்றடைவதற்கும் உதவும் வகையில் பயிற்சி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் நிதியுதவிக்கான அணுகல் ஆகியவை இதில் அடங்கும்.
இது ஆங்கிலம், இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளம், மலையாளம், குஜராத்தி மற்றும் மராத்தி உட்பட மொத்தம் ஒன்பது மொழிகளிலான செய்தி வெளியீட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கிறது.