TNPSC Thervupettagam

இந்திய யுக்திகள் குழுவில் நுழைதல் - இலங்கை

October 19 , 2018 2134 days 592 0
  • இலங்கையைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் அதிகம் முதலீடு செய்வதற்கு உதவிடுவதற்கான யுக்தியை வடிவமைக்க 8-10 நபர்கள் கொண்ட இந்திய யுக்திகள் குழுவில் நுழைதல் என்ற குழுவை இலங்கை அமைத்துள்ளது.
  • இக்குழுவானது இலங்கையின் சர்வதேச வர்த்தகம் மற்றும் யுக்திகள் மேம்பாட்டு நடவடிக்கைத்துறை அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
  • இக்குழு ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தலைவர் இந்திரா மல்வத்தே மற்றும் இலங்கை வர்த்தக மையத்தின் முன்னாள் தலைவர் சுரேஷ் ஷா ஆகியோரால் தலைமை தாங்கப்படும்.
  • இக்குழுவிற்கு 2018 ஆம் ஆண்டிற்குள்ளாக சந்தை அணுகல் மற்றும் அதற்கான இடைக்கால அறிக்கையை தயார் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்