மகாராஷ்டிரா மாநில அரசானது, புனேவில் 'இந்திரயானி மெடிசிட்டி' என்ற பெயரில் இந்திய நாட்டின் முதல் மருத்துவ நகரத்தை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இது அனைத்து வகையான பல்வேறு சிறப்புச் சிகிச்சைகளையும் ஒரே இடத்தில் வழங்கச் செய்வதற்கான இடமாக விளங்கும்.
இந்திரயானி மெடிசிட்டியில் (மருத்துவ நகரத்தில்) மருத்துவமனைகள், மருத்துவ ஆராய்ச்சி மையங்கள், மருந்துத் தயாரிப்பு, ஆரோக்கியம் மற்றும் பிசியோதெரபி (உடலியக்க மருத்துவம்) ஆகியவை இடம் பெறும்.