TNPSC Thervupettagam

இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது

October 16 , 2017 2468 days 1082 0
  • கர்நாடக இசைப்பாடகரான டி.எம்.கிருஷ்ணா 2015-16ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பாதுகாக்கும் வகையிலும் செயல்பட்டமைக்காக 2015-16ஆம் ஆண்டிற்கான 30வது இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவ்விருது இந்திரா காந்தியின் மறைவு தினமான அக்டோபர் 31ஆம் தேதி அன்று வழங்கப்படும்.
  • கலாச்சார விஷயங்களில் சமூக உள்ளடக்கத்தை கொணர்ந்ததன் காரணமாக (Bringing Social inclusiveness in Culture) 2016 ஆம் ஆண்டு இவருக்கு இராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது
  • காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு நிறுவன வருடமான 1985ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது.
  • இந்தியாவிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்கள் இடையே தோழமையையும், புரிந்துணர்வையும், தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தவர்களுக்கு அக்டோபர் 31ஆம் தேதி ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்