TNPSC Thervupettagam

இந்தோ – மியான்மர் ஒப்பந்தம்

January 5 , 2018 2388 days 698 0
  • இரு நாட்டு மக்களுக்கிடையேயான பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மற்றும் மியான்மருக்கிடையேயான நில வழி எல்லை கடத்தல் (Land border Crossing) திட்டத்திற்கு மத்திய கேபினேட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் மக்களுக்கும், மியான்மரிய மக்களுக்கும் இடையேயான பொருளாதார தொடர்பை மேம்படுத்துவதற்காகவும்,  இரு பகுதிகளுக்கும் இடையே நிலவழி இணைப்பை ஏற்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • செல்லுபடியான கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவை வைத்திருப்பதன் அடிப்படையில் மக்கள் எல்லையை கடக்க இயலும். இதனால் இரு நாட்டிற்கிடையேயான பொருளாதார மற்றும் சமூகத் தொடர்பு மேம்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்