உலக சாம்பியன் இறகுப் பந்தாட்ட வீராங்கனையான பி.வி. சிந்து என்பவர் இந்த ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், மாற்றுத் திறனாளி இறகுப் பந்தாட்ட வீரரான மானசி ஜோஷி, தடகள வீராங்கனையான டூட்டி சந்த் மற்றும் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் ஆகியோரை விட இவர் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றார்.
அதே விழாவில், புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி. உஷாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப் பட்டது.