இமாச்சலப் பிரதேச அரசானது முக்கிய மந்திரி சேவா சங்கல்ப் உதவி எண்ணான “1100” (முதலமைச்சரின் சேவைத் தீர்வுகள் உதவி எண்) என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையானது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களின் குறைகளை விரைவாகவும் தக்க நேரத்திலும் தீர்ப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
முக்கிய மந்திரி சேவா சங்கல்ப் உதவி எண் தொடங்கப்பட்டதன் மூலம் இந்த வசதியை வழங்கும் இந்தியாவின் 4வது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
இதுவரை, இந்த சேவையானது உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கின்றது.