இமாலயப் பனிப்பாறைகளின் தடிமனைக் கணக்கிடுவதற்காக ஒரு வான்வழி ரேடார் ஆய்வினை மேற்கொள்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்த முன்னோட்ட ஆய்வானது இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் லகௌல்-ஸ்பிதி படுகையில் மேற்கொள்ளப் படும்.
இது புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ், துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தினால் (NCPOR – National Centre for Polar Ocean Research) முன்மொழியப் பட்டது.
இந்தியா, தீவிரமான வானிலை நிகழ்வுகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும்.
மேலும் காலநிலை ஆபத்துக் குறியீட்டில் இந்தியா 20வது இடத்திலுள்ளது.