கடல் பாதுகாப்பிற்கான தனது செயலுக்காக உலக இயற்கையின் எதிர்காலத்திற்கான விருதினைப் பெறும் இரண்டாவது இந்தியர் மற்றும் முதல் பெண்மணியாக டாக்டர் திவ்யா கர்னாட் உருவெடுத்துள்ளார்.
இவ்விருதினைப் பெற்ற மற்றுமொரு இந்தியர் டாக்டர் சாருதத் மிஸ்ரா ஆவார்.
இவ்விருது ஒவ்வொரு வருடமும் மூன்று நபர்களுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வருடம் திவ்யாவைத் தவிர பிரேசிலின் பெர்ணான்டா ஆப்ராவும், ருவாண்டாவின் ஒலிவியர் செங்கிமனாவும் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
இயற்கையின் எதிர்காலம் என்ற அமைப்பால் வழங்கப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான இயற்கையின் எதிர்காலத்திற்கான விருது வன விலங்குகள் மற்றும் தாவர இனங்களைப் பாதுகாப்பதில் புரிந்த உணரத் தகுந்த சாதனைகளைக் கொண்டாடுகின்றது.