திருச்சூர் - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கேரளாவின் முதலாவது இரட்டைச் சாலை சுரங்கப் பாதையான குதிரன் சுரங்கப் பாதையின் ஒரு பக்கத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இது கேரள மாநிலத்தின் முதலாவது சுரங்கப்பாதைச் சாலையாகும்.
இது தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கான போக்குவரத்து இணைப்பைப் பெருமளவில் மேம்படுத்தும்.
1.6 கி.மீ. நீளமான இந்த சுரங்கப் பாதையானது பேச்சி - வழனி (Peechi-Vazahani) என்ற வனவிலங்குச் சரணாயலத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ளது.