TNPSC Thervupettagam

இரண்டாம் கட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்: 3.4 கோடி குழந்தைகளுக்கு செலுத்த இலக்கு

August 8 , 2017 2536 days 953 0
  • இரண்டாம் கட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் துவக்கியுள்ளது . இந்த முகாமில், 3.4 கோடி குழந்தைகளுக்கு அந்தத் தடுப்பூசியை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேசம், சண்டிகர், ஹிமாசலப் பிரதேசம், கேரளம், தெலுங்கானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும், தாத்ரா-நாகர் ஹவேலி, டாமன்-டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இந்த இரண்டாம் கட்ட தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
  • முதல் கட்டமாக, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும், கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்ற தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முகாமில்3 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது, தடுப்பூசி போடுவதற்குரிய வயதுக் குழந்தைகளின் எண்ணிக்கையில் 97 சதவீதமாகும்.
  • பல கட்டங்களாக நடத்தப்படும் இந்த முகாம்களில், 9 மாதக் குழந்தைகள் முதல் 15 வயதுக்குற்பட்ட சிறுவர்கள் வரை, மொத்தம் 41 கோடி பேருக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த முகாம்களைத் தொடர்ந்து, தற்போது 9-இல் இருந்து 12 மாதங்களுக்குள் ஒரு முறையும், 16-இல் இருந்து 24 மாதங்களுக்கு ஒருமுறையும் வழங்கப்பட்டு வரும் தட்டம்மை தடுப்பூசிகளுக்குப் பதிலாக, தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசிகள் போடுவது வழக்கமாக்கப்படும்.
  • தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை குழந்தைகளிடம் உருவாக்கி, அந்த இரு நோய்களையும் ஒழித்துக்கட்டுவதே இந்த முகாம்களின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்