TNPSC Thervupettagam

இரயில்வே பாதுகாப்புப் படையின் 38வது எழுச்சி தினம்

September 24 , 2022 701 days 268 0
  • இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) ஆனது 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி அன்று தனது 38வது எழுச்சி தினத்தைக் கொண்டாடியது.
  • இரயில்வே பாதுகாப்புப் படையின் தேசிய அளவிலான அணிவகுப்பு புது டெல்லிக்கு வெளியே வேறு ஒரு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
  • இரயில்வே சொத்துக்களுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக 1957 ஆம் ஆண்டின் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் இரயில்வே பாதுகாப்புப் படையானது உருவாக்கப் பட்டது.
  • பாராளுமன்றமானது 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதியன்று, இரயில்வே பாதுகாப்புப் படைச் சட்டத்தைத் திருத்தியதன் மூலம் ‘மத்திய அரசின் ஆயுதப்படை’ என்ற அந்தஸ்தானது இப்படைக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்