TNPSC Thervupettagam

இரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருது – 2020

December 13 , 2020 1322 days 630 0
  • இது அமெரிக்காவில் உள்ள ஒரு பதிப்பகத்தாரான பண்டாலோவினால் 2018 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்தியப் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ராஜ் கமல் ஷா அவர்கள் அவருடைய நாவலான “நகரம் மற்றும் கடற்கரை” (The City and The Sea) என்பதற்காக 2020 ஆம் ஆண்டின் இரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருது வழங்கி கௌரவிக்கப் பட்டு உள்ளார்.
  • ஷாவின் புத்தகமான “நகரம் மற்றும் கடற்கரை” ஆனது 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்த நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • 2020 ஆம் ஆண்டின் சமூக சாதனைக்கான இரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருதானது ஓமன் நாட்டின் மறைந்த வலிமை வாய்ந்த சுல்தானான சுல்தான் குவாமோஸ் பின் சையது அல் சையது மற்றும் ஓமன்  நாட்டின் மக்கள் ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • சமூக சாதனை விருதானது இந்த ஆண்டில் 2 வெற்றியாளர்களைக் கொண்டுள்ளது.
  • புகழ்பெற்ற இந்திய நடன இயக்குநரான சந்தீப் சோப்பார்க்கர் என்பவர் அதன் மற்றொரு வெற்றியாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்