ஆணவம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் திருமணம் செய்பவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதைத் தடை செய்யும் மசோதா, 2019 ஆனது இராஜஸ்தான் அரசால் நிறைவேற்றப்பட்டது.
இது இராஜஸ்தானில் “ஆணவக் கொலை” மற்றும் “கும்பல் கொலை” நிகழ்வுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குடும்ப கௌரவம் என்ற பெயரில் திருமணமானவர்களை கொலை செய்வதற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிப்பதற்கான விதிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.
கும்பல் கொலைகளைத் தடுப்பதற்காக 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டம் நிறைவேற்றிய முதலாவது மாநிலம் மணிப்பூர் ஆகும். தற்பொழுது இச்சட்டத்தை நிறைவேற்றிய இரண்டாவது மாநிலம் இராஜஸ்தான் ஆகும்.