பஜ்ரங் புனியா மற்றும் புகழ்பெற்ற பாரா தடகள வீரர் தீபா மாலிக் ஆகியோர் 2019 ஆம் ஆண்டின் இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற போது, பாரா தடகளப் பதக்கத்தை வென்ற முதலாவது பெண் வீராங்கனையாக தீபா உருவெடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு, இவர் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிக்கு மாறி ஜகர்த்தாவில் ஒரு புதிய ஆசியச் சாதனையைப் படைத்துள்ளார். தொடர்ந்து 3 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (2010, 2014, 2018) பதக்கங்களை வென்ற ஒரே இந்தியப் பெண்மணியாக இவர் உருவடுத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஈட்டி எறிதல் வீரரான தேவேந்திர ஜஹஜ்ஹாரியாவிற்குப் பின்பு புகழ்பெற்ற இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இரண்டாவது பாரா தடகள வீரராக இவர் உருவெடுக்கவிருக்கின்றார்.
இதுபற்றி
இராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது என்பது இந்தியாவில் வழங்கப்படும் விளையாட்டுப் போட்டிகளுக்கான உயரிய விருதாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தினால் வழங்கப்படுகின்றது.
இந்த விருது ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு வழங்கப்பட முடியும்.
1992 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினை வென்ற முதல் வெற்றியாளர் விஸ்வநாதன் ஆனந்த் ஆவார்.