வளர்ந்து வரும் நாடுகளின் இளம் கணிதவியலாளர்களுக்கு வழங்கப்படும் ராமானுஜன் பரிசானது (2021) இந்தியக் கணிதவியலாளர் நீனா குப்தா என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
கேண்முறை அல்லது பொருத்த முறை இயற்கணித வடிவியல் மற்றும் பரிமாற்ற இயற்கணிதம் (affine algebraic geometry and commutative algebra) ஆகியவற்றில் இவரது சிறந்தப் பங்களிப்பிற்காக வேண்டி இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் நீனா குப்தா, கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளி விவரக் கல்வி நிறுவனத்தில் பணி புரியும் ஒரு கணிதவியலாளர் ஆவார்.
இராமானுஜர் பரிசினை வென்ற 3வது பெண்மணி இவர் ஆவார்.
இந்த விருதானது முதன்முறையாக 2005 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்த விருதானது அப்துஸ் சலாம் சர்வதேச தேற்ற இயற்பியல் மையத்தினால் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சர்வதேச கணித ஒன்றியம் ஆகியவற்றுடன் இணைந்து வழங்கப்படுகிறது.