TNPSC Thervupettagam

இரு பிரப்ஹாரி அலுவலர்கள்

December 7 , 2017 2415 days 842 0
  • “விதிவிலக்கான சூழ்நிலைகளின்” (Exceptional Circumstance) வழக்குகளை விசாரிப்பதற்கான தனிநபர் அமர்வினை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாய (நடைமுறை மற்றும் செயல்முறை) விதிகள் 2011-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் “விதிவிலக்கான சூழ்நிலைகள்” எவை என்பதற்கான விளக்கம் அளிக்கப்படவில்லை.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாய (நடைமுறை மற்றும் செயல்முறை) விதிகள் 2011-ன் படி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஒவ்வொரு கிளைகளும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். அவர்களில் குறைந்த பட்சம் ஒருவர் நீதித்துறையை சேர்ந்தவராகவும் ஒருவர் நிபுணராகவும்  இருத்தல் வேண்டும்.
  • NGT-ன் தலைமை மற்றும் மண்டலக் கிளைகளில் உள்ள பணியிடத்தை நிரப்பாமல் மத்திய அரசு உள்ளதென உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
  தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் விதிகளின் மீறுதல்களால் மக்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் உருவாகும் சேதங்களுக்கு இழப்பீடு பெறுதல் போன்றவை தொடர்பான வழக்குகளை விரைவாக மற்றும் திறன் விளைவோடு தீர்த்து வைப்பதற்காக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஏற்படுத்தப் பட்டது.
  • இது 2010 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
  • இதன் தலைமையிடம் டெல்லியில் அமைந்துள்ளது.
  • போபால், புனே, கொல்கத்தா, சென்னை ஆகிய நான்கு இடங்களில் இவற்றின் மண்டல கிளைகள் உள்ளன.
  • NGT சட்டத்தின் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டுள்ள சட்டங்களின் கீழ் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சிவில் நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ள தடை உள்ளது.
  • வனஉயிர் பாதுகாப்பு சட்டம்- 1972, இந்திய வனச்சட்டம்- 1927 மற்றும் வனம், மரங்களின் பாதுகாப்பு தொடர்பான மாநில அரசுகளின் பல்வேறு சட்டங்கள் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க NGT- க்கு அதிகாரம் கிடையாது.
  • 1908-ன் சமூகவியல் நடைமுறைச் சட்டத்தின் (Code of Civil Procedure) கீழ் வரையறுக்கப்பட்ட செயல்முறைகளோடு பிணைந்து NGT செயல்படுவதில்லை.
  • இயற்கை நியதியின் கோட்பாடுகளின் படி [Principle of Natural Justice] NGT வழிநடத்தப்படுகின்றது.
  • பின்வரும் சட்டங்களின் கீழ் ஏற்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தொடர்புடைய அனைத்து சிவில் வழக்குகளையும் விசாரிக்க NGT- க்கு அதிகாரம் உள்ளது.
    • தண்ணீர் (பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம் 1974
    • வனப்பாதுகாப்பு சட்டம் 1980
    • காற்று (பாதுகாப்பு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு சட்டம்) 1981
    • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986
    • பொது பொறுப்பு காப்பீட்டுச் சட்டம் 1991
    • உயிரி பல்வகைமைச் சட்டம் 2002

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்