மாதுரி விஜய் என்பவர் “தி ஃபார் ஃபீல்டு” என்ற தனது முதலாவது நாவலுக்காக 2019 ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான JCB பரிசை வென்றுள்ளார்.
இலக்கியத்திற்கான JCB பரிசானது 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு இந்திய இலக்கிய விருதாகும்.
இந்த விருதை நிர்வகிக்க JCB இலக்கிய அமைப்பு நிறுவப் பட்டுள்ளது.
இதற்கு இங்கிலாந்தின் கட்டுமான உற்பத்தி குழுவான JCB என்ற அமைப்பால் நிதியளிக்கப் படுகின்றது.
ஆங்கிலத் துறையில் பணியாற்றும் ஒரு இந்திய எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு தலைசிறந்த புனைக் கதைக்கு அல்லது ஒரு இந்திய எழுத்தாளரால் மொழி பெயர்க்கப்பட்ட புனைக் கதைக்கு இந்தப் பரிசு வழங்கப் படுகின்றது.