TNPSC Thervupettagam

இலங்கை அகதிகளுக்கான அடையாள அட்டைகள்

April 14 , 2025 6 days 64 0
  • தமிழ்நாடு அரசானது, இம்மாநிலத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் வைத்து இருக்கும் அடையாள அட்டைகளை மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கான செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
  • 19,600க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 57,300 இலங்கை அகதிகள் 103 மறுவாழ்வு முகாம்களிலும், தமிழ்நாடு முழுவதுமாக அமைந்துள்ள பல்வேறு சிறப்பு முகாமிலும் வசித்து வருகின்றனர்.
  • ஓர் ஆய்வின்படி, அவர்களில் 45% பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் ஆவர்.
  • அவர்களில் 41% பேர், 1988 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவிற்கு வந்திருந்தாலும், அவர்களில் 79% பேர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவிலேயே தங்கியுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்