தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழான மத்திய அரசின் இலவச அரிசி வழங்கீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அட்டைதாரர்களுக்கு, ஒரு மாதத்திற்கு ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வீதம் ஐந்து கிலோ அரிசி வழங்குவதற்கு இந்த மத்திய அரசின் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் மாநில அரசு தனது சொந்தச் செலவில் கூடுதலாக 35.52 லட்சம் அட்டை தாரர்களுக்கும் இந்தத் திட்டத்தின் பயனை விரிவுபடுத்த உள்ளது.
இரண்டு வகையான திட்டங்களின் அட்டைதாரர்கள், டிசம்பர் 31 ஆம் தேதி வரை பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழான பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கீட்டுத் திட்டத்தின் பலனைப் பெற்று வந்தனர்.