உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசானது டிசம்பர் 25 அன்று இலவச திறன்பேசி திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
டிசம்பர் 25 ஆம் தேதியானது மூத்த பா.ஜ.க தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளாகும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல்நிலையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு திறன்பேசிகள் மற்றும் வரைபட்டிகைகள் ஆகியவற்றை அந்த மாநில அரசு வழங்க உள்ளது.