TNPSC Thervupettagam

இலவச மடிக்கணினி திட்டம்

February 28 , 2019 1969 days 2312 0
  • பிப்ரவரி 27-ம் தேதியன்று தமிழ்நாடு முதல்வர் 2018-19 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்காக இலவச மடிக்கணினித் திட்டத்தை துவக்கி வைத்தார்.
  • இக்கல்வியாண்டின் போது ஏறக்குறைய 15.18 லட்சம் மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்கப்படுவர்.
  • அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 5.12 லட்சம் மாணவர்களின் நலனிற்காக இந்த வருடம் முதல் பதினோராம் வகுப்பு மாணவர்களிடமே மடிக்கணினி வழங்கும் கொள்கை முடிவை அரசு எடுத்துள்ளது.
  • இவ்வருடம் முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுடன், 11-ம் வகுப்பு மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக்குகளில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிகளில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களும் இப்பலனைப் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்