கேரள மாநில காவல்துறையானது இளஞ்சிவப்பு பாதுகாப்புத் திட்டம் எனும் புதிய ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இது பொது, தனியார் மற்றும் இணையதளம் (டிஜிட்டல்) ஆகிய பகுதிகளில் பெண்களைப் பாதுகாப்பதற்கான திட்டமாகும்.
வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள், இணைய வழியிலான வன்முறைகள் மற்றும் பொது இடங்களில் அவமதிப்பு போன்ற பல பிரச்சினைகளைத் தடுப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.