பேராசிரியர் நீனா குப்தாவிற்கு 2021 ஆம் ஆண்டின் இளம் கணிதவியலாளர்களுக்கான இராமானுஜன் பரிசானது வழங்கப்பட்டுள்ளது.
இவர் கொல்கத்தாவிலுள்ள இந்தியப் புள்ளியியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார்.
கேண்முறை இயற்கணித வடிவியல் மற்றும் பரிமாற்ற இயற்கணிதம் (affine algebraic geometry and commutative algebra) ஆகியவற்றில் இவர் ஆற்றிய ஒரு சிறப்பானப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்பட்டது.
இளம் கணிதவியலாளர்களுக்கான இராமானுஜன் பரிசானது, இத்தாலியிலுள்ள “சர்வதேசக் கோட்பாட்டு இயற்பியல் மையத்தினால்” ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு கணிதப் பரிசாகும்.
இந்தப் பரிசானது 2004 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு முதன்முதலில் 2005 ஆம் ஆண்டில் வழங்கப் பட்டது.