இருபத்தி இரண்டாவது நெசெட்டின் (இஸ்ரேல் பாராளுமன்றம்) 120 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக செப்டம்பர் மாதம் இஸ்ரேலில் சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
தேர்தலுக்குப் பிறகு தற்போதைய பிரதமர் இஸ்ரேலில் அரசாங்கத்தை அமைக்க பொறுப்பேற்றார்.
இருப்பினும், அவர் நெசெட்டில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் நடந்த முந்தைய தேர்தல்களைத் தொடர்ந்து, தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு ஆளும் கூட்டணியை உருவாக்கத் தவறிவிட்டார், இது இஸ்ரேலிய வரலாற்றில் இதுபோன்ற முதல் தோல்வியாகக் கருதப்படுகிறது .
அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னரே முதல் முறையாக நெசெட் அமைப்பு இந்தத் தேர்தலில் கலைக்கப்பட்டது.