இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஏவுகல ஏவுதலுக்கான நேரக் கணக்கீட்டு அறிவிப்பின் பின்னணி குரலாக இருந்த அறிவியலாளர் வளர்மதி காலம் ஆனார்.
இந்தியாவின் முதல் வெற்றிகரமான நிலவு ஆய்வுப் பயணமான சந்திரயான்-3 திட்டத்தின் ஏவுகலத்தின் ஏவுதலுக்கான நேரக் கணக்கீட்டு அறிவிப்பிற்கும் இவரே குரல் கொடுத்தார் என்ற வகையில் இதுவே அவரது இறுதிப் பணியாக அமைந்தது.
2015 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் APJ அப்துல் கலாம் விருதினை N. வளர்மதிக்கு வழங்கினார்.
2012 ஆம் ஆண்டில் RISAT-1 எனப்படும் ரேடார் வரைபடமாக்க செயற்கைக் கோளினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.