TNPSC Thervupettagam

இ-தாகில் தளம்

March 2 , 2021 1271 days 776 0
  • நுகர்வோர் குறை தீர்க்கும் இ-தாகில் தளமானது இப்போது 15 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் செயல்பட்டு வருகிறது.
  • இதற்காக 'edaakhil.nic.in' என்ற பெயரில் நுகர்வோர் புகார்களை மின்னணு-தாக்கல் செய்வதற்கான வலைப் பயன்பாட்டைத் தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ளது.
  • இந்த மின்னணு-தாக்கல் ஆனது இந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தால் தொடங்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 8, அன்று இதைச் செயல்படுத்திய முதல் மாநிலம் தில்லி ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டிற்கான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2020 ஆம் ஆண்டின் ஜூலை 20 முதல் நடைமுறைக்கு வந்தது.
  • இது நுகர்வோர் ஆணையத்தில் நுகர்வோர் தங்களது புகார்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கும், புகாரைத் தாக்கல் செய்வதற்கான கட்டணங்களை இணைய வழியில் செலுத்துவதற்குமான வசதிகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்