TNPSC Thervupettagam

உணவுப் பற்றாக்குறை மீதான சர்வதேச அறிக்கை

April 4 , 2019 1968 days 696 0
  • ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and Agriculture Organization of the United Nations - FAO) மற்றும் ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் ஆகியவை ஒன்றிணைந்து உணவுப் பற்றாக்குறை மீதான சர்வதேச அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது 2018 ஆம் ஆண்டில் 53 நாடுகளில் ஏறத்தாழ 113 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர் கொண்டிருந்தனர் என்பதைக் கண்டறிந்துள்ளது.
  • ஏறத்தாழ பட்டினியை எதிர்கொண்டிருக்கும் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் 8 நாடுகளில் உள்ளனர். அந்த நாடுகளாவன: ஆப்கானிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகியவையாகும்.
  • மிகக் கடுமையான உணவுப் பற்றாக்குறை என்பது பட்டினியின் மிகக் கொடிய வடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்