TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டுத் தீ

May 12 , 2024 50 days 107 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் பெளரி கர்வால் மாவட்டத்தில் உள்ள துமகோட் பகுதியில் உள்ள மலையின் உயர்மட்டப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அம்மாநிலத்தின் வனத் துறையால் பதிவு செய்யப் பட்ட 998 காட்டுத் தீ சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • மே 06 முதல் 07 வரை மட்டும் 68 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
  • கடந்த பருவத்தில், அம்மாநிலத்தில் இதுபோன்ற 773 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
  • இந்திய விமானப்படை அதன் Mi17 V5 ஹெலிகாப்டர்களை தீயணைப்பிற்காக மேற் கொள்ளப் படும் வானிலிருந்து நீர் தெளிக்கும் நடவடிக்கைகளுக்காக அனுப்பியது.
  • இந்தச் சிறப்புத் தீயணைக்கும் நுட்பமானது ஹெலிகாப்டருக்கு அடியில் இருந்து ஒரு கொள்கலனைத் தொங்கவிட்டு, அதில் நீர் நிரப்பி, பின்னர் அதை தீ விபத்து மண்டலத்தின் மீது விடுவிப்பதை உள்ளடக்கும்.
  • அணுக முடியாத பகுதிகளில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இந்தச் செயல்முறை மிக இன்றியமையாதவையாகும்.
  • காட்டுத் தீயைத் தடுக்க வேண்டி, அரசாங்கம் ‘பைருல் லாவோ-பைசே பாவ்’ (பைன் இலைகளுக்குப் பணம் பெறுதல்) திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்