கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிகளை இணைக்கும் பிரயாக்ராஜில் (முன்னர் அலகாபாத்) ஒரு பழமையான, வறண்ட நதியை மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அகழ்ந்து கண்டறிந்துள்ளது.
தூய்மையான கங்கை நதிக்கான தேசியத் திட்டமானது (National Mission for Clean Ganga - NMCG) இதை நிலத்தடி நீரை மேலும் பெருக்குவதற்கான ஆதாரமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
புதையுண்ட இந்தப் "பழங்கால நதியானது" சுமார் 4 கி.மீ அகலமும் 45 கி.மீ நீளமும் மண்ணின் கீழே 15 மீட்டர் தடிமன் கொண்ட அடுக்கையும் கொண்டிருக்கின்றது.
புராண காலத்திய சரஸ்வதி நதி இருந்திருக்கலாம் என்று செயல்பாடற்ற நதி தொடர்பான எச்சங்களின் (பேலியோ சேனல்) சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஒரு பேலியோ சேனல் என்பது ஒரு செயலற்ற நதி அல்லது நீரோடைக் கால்வாயின் எச்சமாகும். இது இளம் அல்லது புதிய வண்டல் மண்ணால் புதையுண்டிருக்கின்றது.
இந்தக் கண்டுபிடிப்பானது கடந்த டிசம்பரில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்ற – தேசியப் புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.