உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில், மத்திய அரசானது “நிரந்தர” உயர் அதிகாரம் பெற்ற குழுவை (CEC) அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுவரையில் தற்காலிகமாக இயங்கி வந்த, சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கான குழு தற்போது நிரந்தரச் சட்டப்பூர்வ அமைப்பாக அங்கீகரிக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவானது (CEC) முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தினால் 2002 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
காடுகள் மற்றும் வனவிலங்கு சார்ந்த வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அமலாக்கத்தினைக் கண்காணிப்பதற்காக என்று தேசிய அளவில் ஒரு குழுவினை அமைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.