TNPSC Thervupettagam

உயர் இரத்த அழுத்தம் பற்றிய உலகளாவிய அறிக்கை

September 25 , 2023 298 days 183 0
  • உலக சுகாதார அமைப்பானது (WHO), உயர் இரத்த அழுத்தத்தின் பேரழிவு மிக்க தாக்கம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 'உயர் இரத்த அழுத்தம் குறித்த உலகளாவிய அறிக்கை: அமைதியான உயிர்க் கொல்லிக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப் பட்டு உள்ளது.
  • ஒத்த வயதுடைய 188.3 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டு உள்ளனர்.
  • இந்தியர்களில் 37 சதவீதம் பேர் மட்டுமே சரியான நேரத்தில் இந்த நோய் இருப்பதைக் கண்டறிந்துள்ள நிலையில்  அவர்களில் 30 சதவீதம் பேர் அதற்கான சிகிச்சையினைப் பெறுகிறார்கள்.
  • உலக நாடுகள் இதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தினால் 2050 ஆம் ஆண்டிற்குள் 76 மில்லியன் இறப்புகளைத் தவிர்க்கலாம்.
  • இந்தியாவில், உயர் இரத்த அழுத்தம் உள்ள 30 முதல் 79 வயதுக்குட்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால், 2040 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 40 மில்லியன் இறப்புகளைத் தடுக்க முடியும்.
  • 50 சதவீதக் கட்டுப்பாட்டு விகிதத்தை அடைய, உயர் இரத்த அழுத்தம் உள்ள 67 மில்லியன் மக்கள் திறம்பட்ட முறையிலான சிகிச்சையினைப் பெற வேண்டும்.
  • 140/90 mmHg அல்லது அதற்கும் அதிகமாக இரத்த அழுத்தம் கொண்ட நபர்களின் தரவுகளின் மீதான பகுப்பாய்வின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் இந்த அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
  • உயர் இரத்த அழுத்தம் ஆனது பக்கவாதம், மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்