TNPSC Thervupettagam

உயிரிவழிச் சீராக்கம்

May 14 , 2019 1894 days 656 0
  • சிஎஸ்ஐஆர் – தேசியத் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-National Botanical Research Institute – CSIR/NBRI) மற்றும் லக்னோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் உள்ள ஆர்செனிக் கழிவுகளை நீக்குவதற்காக 2 உள்நாட்டு பாக்டீரியாக்களைப் பயன்படுத்தினர்.
  • இந்த 2 பாக்டீரியாக்கள் பேசிலஸ் பிலெக்ஸ் மற்றும் அசினோபாக்டர் ஜுனி என்று பெயரிடப்பட்டுள்ளன.
  • இவை ஆர்சனிக் கழிவுகள் உள்ள மண்ணில் உள்ள தாவரங்களின் வேர்களில் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்ளுதல் என்ற முறையின் கீழ் வாழ்கின்றன. இவை நச்சுத் தன்மையை ஏற்படுத்தாமல் தேவையான ஊட்டச் சத்துகளை தாவரங்கள் எடுத்துக் கொள்ள உதவுகின்றன.
  • மேலும் இவை தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
  • உயிரிவழிச் சீராக்கமானது மண் மற்றும் இதர சுற்றுச்சூழல்களில் கலந்துள்ள கழிவுகளை நீக்குவதற்கு நுண் உயிரிகள், தாவரங்கள், தாவர நொதிகளைப் பயன்படுத்துகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்