TNPSC Thervupettagam

உயிர் செறிவூட்டப்பட்ட முதலாவது சோளம்

July 9 , 2018 2202 days 745 0
  • வழக்கமான சோளத்தை விட அதிக அளவிலான இரும்பு மற்றும் துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்ட, பர்பானி சக்தி என்று பெயரிடப்பட்ட இந்தியாவின் முதல் உயிர் செறிவூட்டப்பட்ட சோளம் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்த மேம்படுத்தப்பட்ட சோள வகையானது, மித வறட்சி வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தினால் (International Crops Research Institute for the Semi-Arid-Tropics - ICRISAT) உருவாக்கப்பட்டது.
  • இது மகாராஷ்டிராவின் வசந்தரோ நாயக் மரத்வாடா கிரிஷி வித்யாபீத் (VNMKV - Vasautrao Naik Marathwada Krishi Vidyapeeth) என்ற நிறுவனத்தால் சாகுபடிக்காக வெளியிடப்பட்டுள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட வகையான ICSR 14001 ஆனது ‘பர்பானி சக்தி’ ஆக VNMKV ஆல் வெளியிடப்பட்டுள்ளது.
  • பர்பானி சக்தி விலை குறைந்த சோள வகையாகும். நுண்ணூட்ட குறைபாட்டினை சரிசெய்வதற்கு இது ஒரு நிலையான தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பர்பானி சக்தி, ஹார்வெஸ்ட் ப்ளஸ் (Harvest Plus) என்ற சோளத்தை உயிர்செறிவூட்டல் திட்டத்தின் கீழ் ICRISAT - யினால் உருவாக்கப்பட்டது.
  • இது மகாராஷ்ட்ராவில் PVK1009 - ஆக சோதனை செய்யப்பட்டது.
  • ஒருங்கிணைந்த சோள மேம்பாட்டுத் திட்ட சோதனையிலும் (All India Co-Ordinated Sorghum Imporvement Project - AICSIP) இது பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.
  • இது மழைக்கால பயிர்வகை (கரீஃப்) ஆக தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இது மழைக்காலத்திற்கு பிறகான காலம் (ரபி) மற்றும் கோடைக்காலங்களிலும் வளரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்